எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பாட்ரிசியா ரேபோன்கட்டுரைகள்

ஜீவத்தண்ணீர்

நீலகிரியிலிருந்து கொய் மலர்கள் எனக்குக் கிடைத்தது. நீண்ட சாலைப்பயணத்தில் அவை கசங்கியும், வதங்கியும் இருந்தன. குளிர்ந்த நன்னீரால் அவை புத்துணர்வு பெறுமென அதிலிருந்த குறிப்பில் சொல்லப்பட்டிருந்தது. அதற்குமுன் அதின் காம்புகளைக் கத்தரிக்க, நீரை உரியச் சுலபமாயிருக்குமாம். அப்படிச் செய்வது அவைகளுக்குத் தீங்கில்லையா? என்ற கேள்வி எனக்குள் பிறந்தது. 

மறுநாள் காலை என் கேள்விக்குப் பதில் கிடைத்தது. நீலகிரியிலிருந்து வந்த அந்த பூச்செண்டு பார்க்கவே பிரம்மிப்பாக இருந்தது, இதுவரை நான் கண்டிராத கொள்ளை அழகு மலர்களாய் இருந்தன. இதெல்லாம் நன்னீர் செய்த மாயம். இயேசு தண்ணீரைக் குறித்து சொன்னதும், விசுவாசிகளுக்கு அவை எவ்வளவு அவசியம் என்பதை எனக்கு நினைவூட்டியது.

அந்த சமாரியப் பெண்ணிடம் இயேசு குடிக்கத் தண்ணீர் கேட்டபோது, கிணற்றிலிருந்து தான் மொண்டதை குடிப்பார் என்றெண்ணினாள். அவரோ, அவள் வாழ்வையே மாற்றினார். அவர் அவளிடம் கேட்டதைக்குறித்து அவள் ஆச்சரியப்பட்டாள். யூதர்கள் சமாரியர்களை அற்பமாகவே எண்ணினர். ஆனால் இயேசுவோ, "நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார்" என்றார் (யோவான் 4:10). பின்னர், தேவாலயத்தில் அவர், "ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்." (7:37) என்று சத்தமிட்டுக் கூறினார்.

என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். (வ.38–39).

வாழ்க்கைப் பயணத்தில் களைத்துப்போன நமக்கும் தேவ ஆவியானவரால் புத்துணர்வு தரமுடியும். அவரே  ஜீவத்தண்ணீராய் நமக்குள் வாசமாயிருந்து  பரிசுத்தமாம் புத்துணர்வைத் தந்து அவருள் ஆழமாய் வளரச்செய்வாராக. 

கற்றலும், நேசித்தலும்

ஸ்காட்லாந்தின் க்ரீநோக் பகுதியிலுள்ள ஒரு ஆரம்பநிலைப் பள்ளியில் பிரசவத்திற்காக விடுப்பிலிருந்த மூன்று ஆசிரியர்கள், தங்கள் குழந்தைகளை அந்த பள்ளிக்கு இரண்டு வாரத்திற்கு ஒருமுறை அழைத்துவந்து மற்ற குழந்தைகளுடன் பழக வைத்தனர். குழந்தைகளுடன் பிள்ளைகள் பழகும்போது, அவர்களுக்கு அனுதாபம், அக்கறை, பிறர்மீது கரிசனை போன்றவை வளருகிறது. அதிகம் பேசாத குழந்தைகளைக் கையாளுவது சற்று சவாலானதே என ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகிறார். பள்ளி செல்லும் மாணவர்களே அதிகம் மற்றவர்களுடன் உரையாடுகின்றனர். ஒரு குழந்தையை பராமரிப்பதற்கான கடின உழைப்பையும், மற்றவர்களின் உணர்வுகளையும் அவர்கள் புரிந்து கொள்கின்றனர். 

பிறரிடம் கரிசனை கொள்வதைப்பபற்றிச் சிறுபிள்ளைகளிடம் கற்பதென்பது விசுவாசிகளுக்குப் புதிதானல்ல. இயேசுவின் பிறப்பைக் குறித்து முதலில் அறிந்தவர்கள் சாதாரண மேய்ப்பர்களே. பிள்ளைகளை இயேசுவிடம் ஜனங்கள் கொண்டுவருகையில், பிள்ளைகளைத் தகுதியற்றவர்களாய் எண்ணிய சீஷர்களை அவர் திருத்தினார். "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது" (மாற்கு 10:14) என்றார்.

இயேசு, "அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்" (வ.16). நம் வாழ்விலும், சிலசமயம் நாம் "சவால்களை" சந்திக்கக்கூடும், மதிப்பற்றவர்களாய் எண்ணப்படக்கூடும், ஆனால், குழந்தையாய்ப் பிறந்த இயேசு நம்மை அன்போடு ஏற்றுக்கொள்கிறார். இதன் மூலம் அன்பின் வல்லமையை நமக்குப் போதிக்கிறார். 

விட்டு விடுவதற்கான பலம்

ஒரு காலத்தில் உலகின் வலிமையான மனிதராக அறியப்பட்ட அமெரிக்க பளுதூக்கும் வீரர் பால் ஆண்டர்சன், 1956ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், தன்னுடைய கடுமையான காதுவலி மற்றும் 103 டிகிரி காய்ச்சலின் மத்தியிலும் உலக சாதனை படைத்தார். இவருடைய முதல் இரண்டு முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. முன்னணி வீரர்களுக்கு பின்தங்கிய நிலையில் இருந்த இவர், தங்கப் பதக்கத்தை வென்று புதிய ஒலிம்பிக் சாதனையை நிகழ்த்தினார். 

இந்த பருத்த விளையாட்டு வீரர் நம்மில் பலவீனமானவர்கள் செய்யக்கூடிய ஒன்றையே செய்தார். தன்னுடைய பெலத்தை விட்டுவிட்டு, தேவனுடைய புதிய பெலத்திற்காய் ஜெபித்தார். “இது பேரம்பேசுவது அல்ல. எனக்கு உதவி தேவைப்பட்டது” என பின்பாக அவர் தெரிவித்தார். தன்னுடைய கடைசி முயற்சியில், அவர் 413.5 பவுண்டு (187.5 கிலோ) எடையுள்ள பளுவை தன் தலைமட்டும் தூக்கினார். கிறிஸ்துவின் அப்போஸ்தலரான பவுல், “அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்” (2 கொரிந்தியர் 12:10) என்று எழுதுகிறார். பலவீனத்திலே தேவனுடைய பலம் பூரணமாய் விளங்கும் (வச. 9) என்பதை பவுல் அறிந்து, ஆவிக்குரிய பெலனைக் குறித்து இவ்வாறு பேசுகிறார். 

ஏசாயா தீர்க்கதரிசி, “சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்” (ஏசாயா 40:29) என்று வலியுறுத்துகிறார். அந்த பலத்தை பெற்றுக்கொள்ளும் வழி எது? இயேசுவுக்குள் அடைக்கலம் புகுதலாகும். யோவான் 15:5இல், “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்று இயேசு சொல்லுகிறார். விளையாட்டு வீரர் ஆண்டர்சன், “உலகத்தின் மிக வலிமையான நபர் கூட கிறிஸ்துவின் வல்லமையில்லாமல் ஒன்றும் செய்யக்கூடாது” என்று அடிக்கடி சொல்வது வழக்கம். அதனால் நம்முடைய மாயையான பலத்தின் மீதான நம்பிக்கையை விட்டு விட்டு, நிலையான தெய்வீகத் துணையை சார்ந்துகொள்வது அவசியம்.

தேவனுடைய நன்மைகளைத் தொடர்ந்து..

எனது கல்லூரி நாட்களில், பெண்கள் துணிக்கடையில் நான் பகுதி நேர வேலை பார்த்தேன். அங்கு பொருட்கள் வாங்க வந்த சிலரை சந்தேகப்பட்ட கடையின் பெண் பாதுகாவலர் ஒருவர், அவர்கள் கடையில் பொருட்களை திருடியிருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டு பின் தொடர்ந்தார். அந்த கடையின் உரிமையாளருடைய பார்வையில் சந்தேகிக்கக்கூடியவர்கள் என்று சிலர் இருக்கிறார்கள். அவருடைய பார்வையில் நல்லவர்களாய் தெரிந்தவர்களை விட்டுவிட்டனர். சில கடைகளில் சந்தேகப்பட்டு, என்னையே பின்தொடர்ந்திருக்கின்றனர். அதினுடைய நுணுக்கங்களை இப்பொழுதும் நான் அறிந்துள்ளதால் அது ஒரு  சுவாரஸ்யமான அனுபவத்தையே கொடுத்தது.

இதற்கு நேர்மாறாக, தாவீது, தன்னை இரண்டு தெய்வீக ஆசீர்வாதம் பின்பற்றுவதாக அறிவித்தார். அவை கர்த்தரின் நன்மையும் கிருபையுமே. இந்த இரண்டு வரங்களும் எப்போதும் மெய்யான அன்போடு அவருடன் இருக்கும். “காக்கும் இரண்டு தூதர்கள்" என்று சுவிசேஷகர் சார்லஸ் ஸ்பர்ஜன் குறிப்பிடும் கர்த்தருடைய தூதர்கள், இருண்ட நாட்களிலும் பிரகாசமான நாட்களிலும் தேவனை விசுவாசிப்பவர்களின் கூடவே இருப்பார்கள். மந்தமான குளிர்கால நாட்களிலும் பிரகாசமான கோடைகால நாட்களிலும், அவருடைய நன்மை நம் தேவைகளை பூர்த்தி செய்கிறது. அவருடைய கிருபை நம் பாவங்களை மூடுகிறது.

ஒரு காலத்தில் மேய்ப்பனாக இருந்த தாவீது, கர்த்தருடைய நன்மையும் கிருபையையும் இணைக்கப்பட்டதின் நோக்கத்தை அறிந்திருந்தார். பயம், கவலை, சோதனை, சந்தேகம் போன்றவைகளும் நம்மைத் தொடரக்கூடியது. நிச்சயமாகவே தாவீதுக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் கர்த்தருடைய நன்மையும் கிருபையையும் எப்போதும் நம்மை தொடர்ந்து பிடிக்கிறது என்று அவர் நம்பினார்.

தாவீது, “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (சங்கீதம் 23:6) என்று மகிழ்ந்து களிகூறினார். இவைகளே நம்மைத் தொடர்ந்து வரக்கூடிய ஆச்சரியமான பரிசு. 

 

ஒரு தாழ்மையான உணவு

பூனேவில் உள்ள ஒரு தேவாலயத்தில் தன்னார்வத் தொண்டு செய்யும் ஒரு அமெரிக்க மிஷனரியை மற்ற தன்னார்வலர்கள் இரவு உணவிற்கு அழைத்தனர். அவர்கள் அருகில் இருந்த ஒரு உணவகத்திற்குச் சென்று, அவர்கள் ஏழு பேர் இருக்கும்போது ஐந்து உணவுகளை ஆர்டர் செய்தனர்.

“எவ்வளவு தவறான எண்ணம்,” மிஷனரி நினைத்தார். ஆனால் உணவுகள் வந்தவுடன் உணவு சமமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டது. மேலும் மிஷனரிக்கு ஐந்து விதமான சுவையான உணவுகளை ருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் எந்த உணவையும் வீணாக்கவில்லை. இது ஒரு தாழ்மையான பாடமாக இருந்தது. அவள் ஊழியம் செய்ய ஒப்புக்கொண்ட கலாச்சாரம் அவளுக்கு இன்னும் புரியவில்லை. தனித்துவத்தை வலியுறுத்தும் அமெரிக்க வாழ்க்கை முறை போலல்ல, இந்தியாவில் வாழ்க்கைமுறையானது, சமூகத்தில் வாழ்வது என்பதை அவள் கற்றுக்கொண்டாள். ஒருவரின் உணவையும் பொருட்களையும் பகிர்ந்து கொள்வதன் மூலம்  மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்கிறார்கள். அவளுடைய வழி அதை விட சிறந்தது அல்ல; சற்று வித்தியாசமாக இருந்தது. “என்னைப் பற்றி நான் அறிந்துகொள்ள இது உதவியாக இருந்தது” என்று அவள் ஒப்புக்கொண்டாள். அவளுடைய சொந்த பாரபட்சங்களை அடையாளம் கண்டு, மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ்வது, அவர்களுக்கு ஊழியம் செய்வதற்கு அவளுக்கு மிகுந்த உதவியாயிருந்தது.

பேதுரு, மற்றவர்களை பணிவுடன் நடத்தவேண்டிய இந்த பாடத்தை திருச்சபைத் தலைவர்களுக்கு கற்பித்தார். “சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல” (1 பேதுரு 5:3) என்று மூப்பர்களுக்கு அறிவுறுத்துகிறார். இளைஞர்களுக்கு? “உங்கள் பெரியவர்களுக்கு அடிபணியுங்கள்; நீங்கள் அனைவரும் மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள்” (வச. 5) என்று ஆலோசனை கூறுகிறார். மேலும் “பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” என்று வலியுறுத்துகிறார். “ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” (வச. 6). இன்று அவருக்கும் மற்றவர்களுக்கும் முன்பாக தாழ்மையுடன் வாழ அவர் நமக்கு உதவுவாராக.

தேவனுக்காக என் வேலையை செய்தல்

நான் எழுதிக்கொண்டிருந்த பத்திரிகையின் கட்டுரை மிக முக்கியமானது என்று உணர்ந்ததால், பத்திரிக்கையின் ஆசிரியருக்கு என்னால் இயன்ற சிறந்த கட்டுரையை வழங்குவதில் சிரமப்பட்டேன். அவருடைய எதிர்பார்ப்பை சந்திக்க தீர்மானித்த நான், மீண்டும் மீண்டும் என்னுடைய சிந்தனைகளை மாற்றி எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் என் பிரச்சனை என்ன? இது எனக்கு சவாலான ஒரு தலைப்பா? அல்லது ஆசிரியர் என்னுடைய வார்த்தைகளை விட்டுவிட்டு, என்னை அங்கீகரிக்க வேண்டும் என்னும் தனிப்பட்ட ஆதங்கமா?

நம் வேலைப் பளுவிற்கு, பவுல் நம்பகமான ஆலோசனையைக் கொடுக்கிறார். கொலோசெய திருச்சபைக்கு எழுதிய நிருபத்தில், மக்கள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லாமல், தேவனுக்காக வேலை செய்ய பவுல் விசுவாசிகளுக்கு அறிவுறுத்துகிறார். அப்போஸ்தலர் அறிவுறுத்தியது போல, “நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்” (கொலோசெயர் 3:23-24).

பவுலின் ஆலோசனையின் பிரகாரம், நம்முடைய பூமிக்குரிய எஜமானர்களின் பார்வையில் நாம் நல்லவர்களாய் காண்பித்துக்கொள்வதற்கு பிரயாசப்பட வேண்டாம். அவர்களை மதித்து, நம்மால் முடிந்த நன்மையான காரியங்களை அவர்களுக்கு நிச்சயமாய் செய்யலாம். ஆனால் நாம் தேவனை முன்நிறுத்தி, நம் வேலையை ஆசீர்வதிக்கும்படிக்கு அவரை சார்ந்துகொண்டால், அவர் நம் முயற்சிகளுக்கு ஒளியூட்டுவார். நம்முடைய வெகுமதி? நம் வேலை அழுத்தங்கள் எளிதாகி, நம் பணிகள் நிறைவடைகின்றன. மேலும் “சிறப்பாய் செய்தீர்கள்” என்ற பாராட்டையும் அவரிடத்திலிருந்து நாம் ஒரு நாள் கேட்க முடியும்.

தேவனில் நடப்படுதல்

“காற்று இளஞ்சிவப்பு மலர்கள் மீது வீசுகிறது.” கவிஞர் சாரா டீஸ்டேலின் வசந்தகால கவிதையான “மே" என்று தலைப்பிடப்பட்ட கவிதையின் துவக்கவரிகள் இது. அதில் காற்றில் அசையும் இளஞ்சிவப்பு மலர்களை படம்பிடித்திருப்பார். ஆனால் டீஸ்டேல் காதல் தோல்வியை எண்ணி புலம்பி அப்பாடலை பாடுகிறார். ஆகையால் அவருடைய கவிதை விரைவில் சோகமாக மாறுகிறது.

எங்கள் கொல்லைப்புறத்தில் இருந்த இளஞ்சிவப்பு மலர்களும் ஒரு சவாலை எதிர்கொண்டது. அவைகள் பூத்துக் குலுங்கிய காலம் முடிந்தவுடன், எங்களின் தோட்டக்காரர் தன்னுடைய கூரான கோடாரியினால் அவைகளை குட்டையாக கத்தரித்தார். நான் அழுதேன். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தரிசாகக் கிடந்த கிளைகள், மீண்டும் வளர்ந்து பூத்துக் குலுங்கத் துவங்கியது. அவைகளுக்கு அவகாசம் தேவை. ஆகையால் நான் பார்க்காத ஒன்றிற்காய் நான் காத்திருக்க வேண்டியது அவசியமாயிருந்தது.

உபத்திரவத்தின் மத்தியிலும் விசுவாசத்தோடு காத்திருந்த பலரைக் குறித்து வேதம் சொல்லுகிறது. தாமதமான மழைக்காக நோவா காத்திருந்தார். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் வாழ காலேப் நாற்பது ஆண்டுகள் காத்திருந்தார். ஒரு குழந்தையைப் பெற ரெபேக்காள் இருபது வருடங்கள் காத்திருந்தாள். யாக்கோபு ராகேலை திருமணம் செய்ய ஏழு ஆண்டுகள் காத்திருந்தார். சிமியோன் குழந்தை இயேசுவைப் பார்க்க காத்திருந்தார். அவர்களின் பொறுமைக்கு தக்க பலன் கிடைத்தது.
இதற்கு நேர்மாறாக, மனிதர்களைப் பார்ப்பவர்கள் “பாழான நிலங்களில் உள்ள புதர்களைப் போல இருப்பார்கள்" (எரேமியா 17:6). கவிஞர் டீஸ்டேல் தனது கவிதையை அத்தகைய இருளில் தான் முடித்தார். “நான் ஒரு குளிரின் நடுக்கத்தோடு போகிறேன்," என்று அவர் தனது கவிதையை நிறைவுசெய்தார். ஆனால், “கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்” என்று எரேமியா மகிழ்ச்சியடைகிறார். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்ட... மரத்தைப் போலிருப்பான்" (வச. 7-8). என் நம்பிக்கையானது, வாழ்க்கையின் இன்ப துன்பங்களில் நம்மோடு நடந்து வரும் தேவனில் நாட்டப்பட்டுள்ளது.

அனலைக் கூட்டுங்கள்

அமெரிக்காவில் இருக்கும் கொலராடோ மாகாணத்தில் தட்பவெப்பநிலை நிமிடத்திற்கு நிமிடம் தீடீரென்று மாற்றமடையக் கூடியது. எங்கள் வீட்டைச் சுற்றிலும் அடிக்கடி மாறும் இந்த தட்பவெப்ப நிலையைக் குறித்து என் கணவர் டேன் மிகுந்த ஆர்வம் காண்பித்தார். சிறிய இயந்திர உபகரணங்களை சேகரிப்பதில் விருப்பமுடைய என் கணவர், அவர் சமீபத்தில் வாங்கிய வெப்பநிலைமானியைக் கொண்டு எங்கள் வீட்டின் நான்கு திசையிலும் தட்பவெப்பநிலையைக் கணக்கிட்டார். அவருடைய செயலை நான் கிண்டல் செய்தாலும், பின்னர் நானும் வெப்பநிலையை கணக்கிட ஆரம்பித்தேன். வீட்டினுள்ளும் வெளியேயும் அடிக்கடி மாறும் வெப்பநிலை மாற்றத்தைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். 

வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லப்பட்டுள்ள ஐசுவரியமான ஏழு பட்டணங்களில் ஒன்றான லவோதிக்கேயாவின் சபையை 'வெதுவெதுப்பான சபை' என்று இயேசு தட்பவெப்பநிலையை வைத்து குறிக்கிறார். பரபரப்பான வங்கி, ஆடைகள் மற்றும் மருத்துவத்திற்கு பெயர்போன இந்நகரம் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டது. எனவே சூடான நீருற்றிலிருந்து தண்ணீரை எடுத்துச் செல்ல ஒரு நீர்வழிப் பாதை அவசியப்பட்டது. அந்நீருற்றிலிருந்து லவோதிக்கேயாவுக்கு தண்ணீர் வந்து சேரும்போது அது சூடாகவும் இல்லை குளிர்ந்ததாகவும் இல்லை. 

அங்கிருந்த திருச்சபையும் வெதுவெதுப்பாகவே இருந்தது. இயேசு, “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்” (வெளி. 3:15-16) என்கிறார். மேலும், “நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு” (வச.19) என்றும் அறிவிக்கிறார். 

நம்முடைய இரட்சகரின் இந்த எச்சரிக்கை நமக்கும் அவசியமானது. நீங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் அனலுமில்லாமல் குளிருமில்லாமல் இருக்கிறீர்களா? அவருடைய சிட்சையை ஏற்றுக்கொண்டு, ஜாக்கிரதையுடனும், விசுவாசத்தில் அனல்கொண்டும் வாழ அவரிடமே உதவி கேளுங்கள். 

இராக்காலத்தின் ஊழியக்காரர்கள்

அந்த தீவிர சுகாதார மருத்துவமனையில் அதிகாலை 3 மணி. ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே நாலாவது முறையாக அந்த கவலையுற்ற நோயாளி அழைப்பு மணியை அழுத்துகிறார். சற்றும் சலிப்பின்றி அந்த இரவுப்பணி செவிலியர் பதிலளிக்கிறார். உடனே மற்றொரு நோயாளி பராமரிப்பிற்காக அலறுகிறார். இதுவும் அச்செவிலியரை ஆச்சரியப்படுத்தவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன், தன் மருத்துவமனையின் பகல்நேர பரபரப்பை தவிர்க்கவே இரவுப்பணியை கேட்டுப்பெற்றாள். அப்பொழுது தான் உண்மை உரைத்தது. இரவுப்பணியில் எப்போதுமே நோயாளிகளை தனியாக தூக்குதல், நகர்த்துதல் போன்ற கூடுதல் பணிகளிருந்தன. மேலும் நோயாளிகளின் நிலையை கூர்ந்து கவனித்து, அவசர நேரங்களில் தக்க மருத்துவரை அழைக்கவும் வேண்டியிருந்தது.

சக இரவுப்பணியாளர்களின் நெருங்கிய நட்பு ஆறுதலாயிருப்பினும், இந்த செவிலியர் போதுமான தூக்கமின்றி அவதிப்படுகிறார். தன் பணி மிக முக்கியமானது என்று கண்டு, தனக்காக ஜெபிக்குமாறு தன் சபையாரை அடிக்கடி கேட்பார். தேவனுக்கே மகிமை! அவர்கள் ஜெபங்கள் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

அவர் இப்படி துதிப்பது ஒரு இரவுப்பணியாளருக்கு நல்லது. நமக்கும் அது நல்லதே. சங்கீதக்காரன், “இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்” (சங்கீதம் 134:1–2) என்றெழுதுகிறார்.

இந்த சங்கீதம், ஆலய காவலாளர்களாய் இரவும் பகலும் தேவனுடைய ஆலயத்தை பாதுகாக்கும் லேவியர்களின் முக்கியப்பணியை பாராட்டி எழுதப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான உலகில், இந்த சங்கீதத்தை குறிப்பாக இரவுப்பணியாளர்களுக்கு பகிர்வது ஏற்றதாயிருக்கும், எனினும் நாம் அனைவரும் தேவனை இரவிலும் துதிக்கலாம். சங்கீதக்காரன், “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக” (வச. 3) என்று ஆறதல்படுத்துகிறார்.